29th August 2018 10:43:17 Hours
வறிய கோட்டின் கீழ் வாழும் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு 22, 222 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திரு சரத் யகம்பத் அவர்களது அனுசரனையில் இராணுவத்தினரது கட்டுமான பணிகளுடன் விடொன்று அமைத்து (25) ஆம் திகதி சனிக் கிழமை கையளிக்கப்பட்டன.
இந்த பணிகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 222 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் தீபால் புசெல்ல அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்த வீடு கையளிப்பு நிகழ்வில் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, வெருகல் பிரதேச செயலாளர்களான சரத் யகம்பத், கே. குணநாதன், 222 ஆவது படைத் தளபதி, 22 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அப்பிரதேச வாசிகள் இணைந்திருந்தனர். bridgemedia | Ανδρικά Nike