27th August 2018 21:40:33 Hours
இலங்கை இராணுவத்தின் 14 ஆவது இராணுவ தளபதியாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்கள் தனது (77) ஆவது வயதில் சுகையீனமுற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயணின்றி (27) அம் திகதி காலை காலமாணார்.
இவர் இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் அதன் பின்னர் பிரேசில் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் கடமை வகித்துள்ளார்.
மேலும் இவர் இராணுவத்தில் சேவையாற்றும் காலங்களில் ‘ரிவிரெஷ’ மற்றும் வேறு நடவடிக்கைகளில் சிறந்த அர்ப்பணிப்பை ஆற்றிய அதிகாரியாவார்.
பன்னிபிடிய தர்மபால வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்து பின்னர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் தனது கல்விகளை மேற்கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இவரது பூதவுடல் கொழும்பு 7 இல் இலக்கம் 410/104 பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. latest Nike release | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ