07th August 2018 14:15:45 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கல்குளம் கஹபத்விலகம வித்தியாலயத்தின் புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
'85 / 86 பெர மெடிகோ ப்ரன்ட்ஸ் இன் நெசசரி அசோசியேஷன்’ நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் குமார ஜயபதிரன அவர்கள் இந்த புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்விற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி டீ.எம் பதிரன , பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாக சபையினர் கலந்து கொண்டனர்.Sports brands | Autres