03rd July 2018 17:05:33 Hours
யாழ் மாவட்டத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு உயர்தர பொது தராதர பரிட்சையில் இலங்கை ரீதியாக சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்கள் இருவர்களுக்கும் மாணவியொருவருக்கும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் ஏற்பாட்டில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மாகொல லயன்ஸ் கழகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய மாகொல லயன்ஸ் கழகத்தின் அனுசரனையில் 3 மடி கணனிகள் மற்றும் மாதாந்தம் புலமைப்பரிசு பணமாக 5000/= ரூபாய் இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த ஶ்ரீதரன் துவாகரன்,( இலங் ரீதியாக உடல் அறிவியல் பாடத்தில முதலாவது இடத்தையும்), புனித பெட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.டி.ஜே போல் ஜன்சன் (இலங்கை ரீதியாக உடல் அறிவியல் பாடத்தில மூன்றாவது இடத்தையும்), யாழ் வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த கமலேஸ்வரி செந்தில்நாதன் என்ற மாணவி (இலங்கை ரீதியாக உயிரியல் தொழில்நுட்ப பாடத்தில் மூன்றாவது இடத்தையும்) பெற்றுள்ளார் .
இந்த மாணவ செல்வங்களை கௌரவிக்கும் முகமாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் இந்த நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட் போர்கூடத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
buy shoes | UOMO, SCARPE