Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2018 17:44:38 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 22 ஆவது ஆண்டு பூர்தி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 22 ஆவது ஆண்டு பூர்தி முன்னிட்டு 2018 ஜூன் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை பல நிகழ்வுகள் இடம் பெற்றனர்.

அதன்படி ஜூன் மாதம் 17 ஆம் திகதி இராணுவ நினைவு துபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் (18) ஆம் திகதி பிரித் பூஜை மற்றும் போதி பூஜை வழிப்பாடுகளும் இடம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து (19) ஆம் திகதி தெல்லிப்பலை புற்று நோய் மருத்துவ மனை வளாகத்தில் சிறமதான பணிகளும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து (20) ஆம் திகதி புதன் கிழமை மாலை அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பொழுபோக்கின் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் சங்கீத இசை கச்சேரியும் இடம் பெற்றது.

ஆண்டு பூர்தி நாள் அன்று யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக படைத் தலைமையக வளாகத்தில் மர நடுகையும் இடம் பெற்றது.

அதற்கமைய யாழ்ப் படைத் தளபதி பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற் கொண்டதுடன் நோயளர்களுடன் கலந்துரையடினார். அதனைத் தொடர்ந்து அனைத்து படையினர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வரலாற்றில் முதலாவது தடவையாக 22 ஆவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு தல்செவன விடுமுறை பங்களாவில் விசேட இரவு உணவும் வழங்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் யாழ் போதனா வைத்திய சாலையின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 23 ஆம் திகதி பலாலி இராணுவ வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிழ்வும் இடம் பெற்றது.

(சிறப்பு செய்திகளின் கீழ் "படையினர் யாழ் வைத்தியசாலைக்கு இரத்தம் தானம் கொடுப்பதாகும் " வெளியிடப்பட்ட கட்டுரை) Running sports | adidas garwen spezial white shoes - New In Shoes for Men