25th June 2018 15:52:07 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 58 ஆவது படைப் பிரிவின் படையினரால் காலியில் உள்ள ஹிற்தோட்ட கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் (23) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
58 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரின் 3 அதிகாரிகள் மற்றும் 50 படையினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தெற்கு மாகாணத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
bridge media | Nike Shoes, Sneakers & Accessories