25th June 2018 13:00:10 Hours
இலங்கை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நடை பவணி நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய இந்த நடை பவணியில் இராணுவத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளும், 150 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
இந்த நடைபவணி காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகி 08.15 மணிக்கு முடிவுற்றது. BMICH வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி பௌத்தாலோக மாவத்தையின் ஊடாக ரேஸ் கோஸ் மைதானத்தினால் பிலிப் குணவர்தன மைதானத்தை வந்தடைந்தனர்.
இந்த நடை பவணிக்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாநாயக அவர்களும் கலந்து கொண்டார். best Running shoes | Nike - Shoes & Sportswear Clothing