24th June 2018 13:41:58 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24, 224 ஆவது படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள 24 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் (18) ஆம் திகதி திங்கட் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைமகாநாடு இடம்பெற்றது.
இந்த நடவடிக்கைகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது எண்ணக் கருவிற்கமைய இந்த ஒருங்கிணைந்த மாநாட்டின் நோக்கம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விரைவாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை பொதுமக்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த மாநாட்டில், மூதூர், தோப்பூர், சம்பூர் மற்றும் கிண்ணியா பகுதிகளில் டெங்கு தடுப்பு பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம், அந்தந்த பிரதேச அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், ஜூன் 23 முதல் ஒரு வாரத்திற்கு இந்த டெங்கு ஒழிப்பு பணிகள்நடாத்தப்படவிருக்கின்றது..
இந்த பேச்சுவார்த்தை மகாநாட்டிற்கு 224 ஆவது படைத் தளபதி கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர, மூதூர் வைத்திய அதிகாரிடொக்டர் வயி ஜெஸ்மி, தோப்பூர் வைத்திய அதிகாரி டொக்டர் கியூஆர் டெவ், பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் ,மூதூர் மௌவி மற்றும் இப்பிரதேச வாசிகள் இணைந்திருந்தனர்.
best shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat