Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2018 21:11:14 Hours

இராணுவத்தினரால் வன்னியில் இடம்பெற்ற கண்காட்சி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான புதிய கண்டு பிடிப்பு கண்காட்சிகள் 21 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் ஜீன் மாதம் 7 , 8 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்த கண்காட்சிகளில் 21, 54, 56, 61 , 62 படைப் பிரிவுகள் மற்றும் முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படை வீர ர்களினால் நிரமானிக்கப்பட்ட பொருட்கள் 38 கண்காட்சி கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்தன.

முதல் நாள் இடம்பெற்ற கண்காட்சிகளை பார்வையிடுவதற்காக வன்னி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் டி.எஸ்.ஏ தெஹிவத்த அவர்கள் வருகை தந்தார்.

இந்த கண்காட்சிகளில் முன்வைக்கப்பட்ட பொருட்கள் பல்கலைகழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களின் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய இராணுவத்தினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த கண்காட்சியில் முதலாவது பரிசு யாணைகளை தடுக்கும் மின் வேலியை நிர்மானித்த17 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த ரயிபல்மென் டப்ள்யூ.பீ.ஜி.சி.டீ ரத்னாயகவிற்கும், இரண்டாவது பரிசு இரும்புகளை வளைக்கும் கருவியை நிர்மானித்த 9 பொறியியலாளர் சேவை படையணியைச் சேர்ந்த பொறியியலாளர் படை வீரர் பி.ஜீ உதய குமாரவிற்கும் மூன்றாவது பரிசு தானியங்களை திரிக்கும் கருவிகளை நிர்மானித்த 15 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் யூ.ஜி.டப்ள்யூ.எம்.டீ.பீ ஜயதிலக அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த கண்காட்சிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் எண்ணக் கருவிற்கமைய 21 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவிலியன்கள் கலந்து கொண்டனர்.

latest jordans | Air Jordan