10th June 2018 21:03:35 Hours
கிளிநொச்சியில் குறைந்த வருமானத்தை பெறும் சிவிலியன்களுக்கு குண்டசாலை செயற்கை அங்கவீன நிறுவனத்தின் அனுசரனையுடன் இராணுவத்தினரின் ஏற்பாட்டுடன் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி ஒத்துழைப்பு மையத்தில் சனிக்கிழமை (9) ஆம் திகதி இடம்பெற்றன.
சிவில் அதிகாரிகள் மற்றும் கிராம சேவக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட செயற்கை கருவூட்டல்களின் அளவை எடுத்துக் கொண்டு இந்த செயற்கை கால்கள் இந்த சிவிலியன்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த செயற்கை கால்கள் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கிளிநொச்சி ஒத்துழைப்பு மையத்தில் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக் காட்டலின் 571 ஆவது படைத் தலைமையகத்தின் எற்பாட்டின் கீழ் டொக்டர் எஸ்.எஸ். அத்தநாயக்க, புரோஸ்டீஷியரும், ஆர்த்தோட்டியும் மற்றும் குண்டசலை ஊனமுற்றோருக்கான மையத்தின் குழுவும் இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, 66 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
Running Sneakers | Nike