05th June 2018 14:57:18 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54, 56 மற்றும் 61 ஆவது படைத் தளபதிகளது பிரியாவிடை நிகழ்வு இம் மாதம் (01) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்றன.
இந்த பிரியாவிடை நிகழ்வுகள் 54 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல காலகமகே, 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக மற்றும் 56 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் திஸ்ஸ நாணாயக்கார அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த பிரியாவிடை நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வருகை தந்து இந்த மூன்று அதிகாரிகளையும் வாழ்த்தி இவர்கள் சார்பாக சிறப்புரையையும் ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான பிரிகேடியர் குமார ஜயம்பதிரன, பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலாள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
short url link | Sneakers