31st May 2018 18:20:53 Hours
இந்திய தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டின ன்ட் கேர்ணல் சேக்கர் மிஷ்ரா அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை (31) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொண்டார்.
கிளிநொச்சி தலைமையகத்திற்கு வருகை தந்த இவரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் தரத்தில் பதவி வகிக்கும் பதவி நிலை உத்தியோகத்தரான கேர்ணல் ரவி பதிரவிதான அவர்கள் வரவேற்று அவரது அலுவலக பணிமனைக்கு சென்று இருவரும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
பின்னர் இந்திய பிரதி பாதுகாப்பு இணைப்பாளரால் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு நினைவுச் சின்னங்களும் பரிமாரப்பட்டன.
Sports brands | Sneakers