25th May 2018 14:30:25 Hours
தேசிய படை வீரர் ஞாபக தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651, மற்றும் 652 ஆவது படைத் தலைமையகம் இணைந்து கிளிநொச்சி பிரதேசங்களில் இம் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முளங்காவில் பாலர் பாடசாலை வளாகம் 11 ஆவது (தொ) கஜபா படையணியினால் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டன.
அமதியாபுரம் அம்மன் கோயிலில் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் அனைத்தும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக் கருவிற்கமைய 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.
Authentic Nike Sneakers | Nike, adidas, Converse & More