16th May 2018 11:59:05 Hours
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்களது பாரியார் திருமதி மாதுலிகா ராவ்ட் அவர்கள் அத்ஹிடியில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுருக்கு’ மே மாதம் (14) ஆம் திகதி வருகை தந்தார்.
இவரை இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரதிநிதியான திருமதி அனுஜா காரியகரவன அவர்கள் இந்திய இராணுவ பிரதானியின் பாரியாரை வரவேற்றார்.
பின்பு அங்கு வருகை தந்த இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு மற்றும் ‘மிஹிந்து செத் மெதுர’ கட்டளை அதிகாரியான கேர்ணல் நந்தன குணவர்தன அவர்களும் இவரை சந்தித்தனர்.
அதனை தொடர்ந்து இந்திய இராணுவ பிரதானியின் பாரியாருக்கு இங்கு அவயவங்களை இழந்த படை வீரரினால் நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டன.
மேலும் இங்குள்ள படை வீரர்களது சுக செய்திகளையும் விசாரித்தார். இறுதியில் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் இந்திய இராணுவ பிரதானியின் பாரியார் கையொப்பமிட்டார்.
. bridge media | adidas poccnr jumper dress pants size