14th May 2018 11:15:21 Hours
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் பாதுகாப்பு பதவி நிலை மற்றும் கடற்படைத் தளபதி அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
முதலில் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியை சம்பிரதாய முறைப்படி கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதன் பின்பு கடற்படைத் தளபதியான வயிஷ் அத்மிரால் சிரிமவன் ரணசிங்க அவர்களை அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக சந்தித்து முக்கியமான விடயங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் (14) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.
அதன் பின்பு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான அத்மிரால் ரவீந்திர சி விஜயதுங்க அவர்களை பீ.எம்.ஐ.சீ.எச் இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தையினை மேற்கொண்டார்.
இவ்விருவரது சந்திப்பின்போது பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு நலன்கள் விடயமாக ஆராயப்பட்டன. இச்சந்திப்பின் முடிவில் நல்லெண்ணங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன.
affiliate link trace | Marki