08th May 2018 22:32:31 Hours
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எட்டாவது பாராளுமன்றத்தின் 2 வது அமர்விற்கு சாதகமாக இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த முப்படைகளின் அணிவகுப்பு மரியாதைகள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஶ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றன.
இந்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில்,மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளருடன் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களால் அமர்வை பெற்றுக் கொண்டார், மேலும் பின்னர் மூன்று முறைமைகளை முறையாக ஏற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டார்.
பிரதம மந்திரி, கெளரவ சபாநாயகர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அரச அதிகாரிகள் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. முப்படையைச் சேர்ந்த 96 படை வீரர்கள் இந்த அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்றுக் கொண்டனர். இராணுவ விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் 33 படை வீரர்களும் இராணுவத்தை பிரதிநிதித்துவ படுத்தி பங்கேற்றுக் கொண்டனர்.
இலங்கை பீரங்கிப் படையணியினால் இந்த அணிவகுப்பு மரியாதையின் போது 21 பீரங்கி வேட்டுகள் முழங்கப்பட்டன.
முறையான வரவேற்பு விழா முடிந்தவுடன், ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் புதிய கொள்கை அறிக்கையை படித்துள்ளார். முதல் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் 1947 அக்டோபர் 14 ஆம் திகதி இடம்பெற்றது. அதன் நிகழ்வு அமர்வு ஆளுநர் சேர் ஹென்றி மாங்க்-மேசன் மூர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் சிம்மாசனத்தை (இராஜசன கத்தாவ) அழைத்தார். அமர்வுகள் திறக்கப்பட்டன.
.ஜனாதிபதியின் உரையாடலின் முடிவில் இந்த நிகழ்வு நிறைவடைந்தன.
Nike air jordan Sneakers | Nike