Header

Sri Lanka Army

Defender of the Nation

08th May 2018 11:51:03 Hours

வடக்கு மாகாணத்தில் இராணுவ நினைவு தின நிகழ்வு

ரணவிரு சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வானது மே மாதம் 04 ஆம் திகதி பலாலி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இடம்பெற்றன.

அனைத்து மத சமய ஆசிர்வாத்த்துடன் இடம்பெற்றன. ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா அவர்களது அழைப்பையேற்று வடக்கு மாகாண ஆளுனர் திரு.ரெஜினோல்ட் குரே அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இந்த நிகழ்விற்கு யாழ் தூதரகத்தின் இந்தியா தூதரக ஜெனரல் எஸ். பாலசந்திரன், மாவட்ட செயலாளர் திரு. என் வேதநாயகம், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி , கிளிநொச்சி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை வடக்கு பிராந்திய கட்டளை அதிகாரி, பலாலி விமானப்படை முகாமின் கட்டளை தளபதி மற்றும் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் கலந்து கொண்டார்.

Sports News | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf