02nd May 2018 15:05:47 Hours
இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் (1) ஆம் திகதி கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படையணி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு வழங்கி வரவேற்றனர். பின்பு படைத் தளபதி தலைமையகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக அஞ்சலியை செலுத்தினார்.
பின்பு படைத் தளபதியினால் ‘சந்தன’ மரக் கன்று நடுகை நிகழ்வுகளை தலைமையக வளாகத்தினுள் நடாத்தினார். அதன் பின்பு சமய சம்பிரதாய ஆசிர்வாதத்தின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார்.
இறுதியில் படைத் தளபதி படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார்.
Nike Sneakers | NIKE AIR HUARACHE