23rd April 2018 19:27:22 Hours
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் 64 ஆவது படைப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் கடந்த (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
இப் பிரதேச மக்களின் நல்லெண்ணம் புரிதல் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துடன் சகவாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் ஆசிர் வாதத்துடன் 64 ஆவது படைப்பரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர அவர்களின் ஆலோசனைக்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப் புத்தாண்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கில் ஓட்ட போட்டி,பனிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் கிராமத்து வீடு, வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய, கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல் போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்களில் இராணுவத்திரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 64 ஆவது படைப்பரிவின் கட்டளைத் தளபதி மற்றும் பல இராணுவ அதிகாரிகளினால் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கியதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. இப் புத்தாண்டு நிகழ்வில் 1000 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் படையினர்களும் பங்கு பற்றினர்.
bridgemedia | Air Jordan Release Dates 2021 Updated , Gov