23rd April 2018 20:08:29 Hours
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு புலனாய்வு படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது காலி கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் புலனாய்வு படையணி தலைமையகத்தில் கடந்த (18) ஆம் திகதி புதன் கிழமை இடம் பெற்றது.
புலனாய்வு படையணி தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இப் புத்தாண்டு நிகழ்வில் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றலின் பின்னர் பல வினோத விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன.
ஆதனைத் தொடர்ந்து மரதன் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கில் ஓட்ட போட்டி,பனிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய,கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல்,போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்களில் பங்குபற்றி படையின மகிழ்ச்சியடைந்தனர்.
ஆதன் பின் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து போட்டிகளிளும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும் கிராமவாசிகள் சிவில் திணைக்கழத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Nike air jordan Sneakers | Air Jordan