23rd April 2018 20:31:53 Hours
சிவிலியன் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடன் 65 ஆவது படைப்பிரிவிற்குட்பட்ட படைப்பரிவுகளின் படையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது சிவில் மக்களின் பங்களிப்புடன் முழங்காவில் விநாயாகர் பொது விளையாட்டு மைதானத்தில் (21) ஆம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்பட்டது.
இப் புத்தாண்டு நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளுடன் மேலும் பல வேடிக்கையான நிகழ்வும் இசை நிகழ்ச்சியையும் இடம் பெற்றதில் பொதுமக்கள் மற்றும் படையினர்களும் பங்கு பற்றினர்.
இந் நிகழ்விற்கு 65 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களின் அழைப்பை எற்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்சங்க ரனவன பிரதான விருந்தினராக கலந்து கொண்டார். இப் புத்தாண்டு நிகழ்வானது 651ஆவது படைப் பரிவினரின் ஓழுங்கமைப்பில் 652 மற்றும் 653 படைப் பிரிவுகளால் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்விற்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Mysneakers | NIKE AIR HUARACHE