Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2018 21:44:47 Hours

முல்லைத்தீவு படையினர் கேப்பாபிலவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில்

முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது இலங்கை இராணுவ காலட் படையினர் (21) ஆம் திகதி சனிக் கிழமையன்று முல்லைத்தீவு கேப்பாபிலவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற் கொண்டனர்.

இந்த சம்பவமானது (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீயை அணைக்க முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் படையினர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

முல்லைதீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஆலோசனைக்கமைய தீ ஏற்பட்ட இடமான முல்லைத்தீவு படைத் தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் கேப்பாபிலவு கிராமத்துக்கு 60 க்கும் மேற்பட்ட படையினர் தீ அணைக்கும் பணிகளுக்கு (21) ஆம் திகதி சனிக் கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டனர்.

Sports Shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp