17th April 2018 13:00:38 Hours
இனிய புத்தாண்டை வரவேற்கும் முகமான 57அவது படைப்பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயளகத்தினர் இணைந்து தமிழ் , சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த (11) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கொண்டாடினர்.
இப் புத்தாண்டு நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்து கொண்டதோடு 57 ஆவது படைப்பரிவுக்கு கீழ் இயங்கும் படைப் பரிவுகளின் கட்டளை தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.
இப் புத்தாண்டு நிகழ்வில் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பமானதுடன் இந்த புத்தாண்டு நிகழ்வில் சம்பிரதாய மற்றும் விநோத போட்டிகளும் இடம் பெற்றன.
இந் நிகழ்விற்கு 1000 க்கு அதிகமான சிவில் மக்களும் இராணுவத்தினரும் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து பிரதான அதிதி உட்பட அனைத்து பிரதான அதிதிகளால் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.
கிளிநாச்சி பிரதேசத்தில் 40 க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் அலகு ராணி தேர்ந் தெடுக்கும் போட்டி அதே தினத்தில் இன்னிசை நிகழ்வும் இடம் பெற்றதுடன் இந் சங்கீத இசை நிகழ்ச்சிக்கு குருநாகல் ஆஷா மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு காற்று எனும் சங்கீத இசைக் குழுவினரது சங்கீத இசை நிகழ்வும் இடம் பெற்றதுடன், மாத்தளை ஷயின் கேள்ஸ் மற்றும் வடக்கு காற்று நடனக் குழுவினரின் நடனக் நிகழ்வும் இடம் பெற்றது.
Sneakers Store | Sneakers