06th April 2018 20:16:28 Hours
இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த படை வீரரான ஜெ பீ ஜி ரவீந்திர குமார அவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது எல்ரீரீஈ பயங்கவாதிகளுடன் போரிட்டு தமது தாய் நாட்டிற்காக தமது வாழ் நாளை தியாகம் செய்தார். அந்த வகையில் ரண்மினிதென்ன திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 29 கண்பார்வையற்றவர்களுக்காக அமைக்கப்பட்ட சியநெதுகம வீட்டு வேலைத் திட்டத்தை திறக்கும் நிகழ்வூ இன்று காலை (06) இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் இப் படை வீரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் இந் நிகழ்வில் ஸ்டாப் சார்ஜன்ட் ஜெ பீ ஜி ரவீந்திர குமார அவர்கள் ரணவிரு சேவா விளையாட்டு கழகத்தின் பிரதித் தலைவரும் கண்பார்வையற்ற கிரிக்கெற் கழகத்தின் தலைவருமாக காணப்படுகின்றார். ஆந்த வகையில் இவ் விளையாட்டுக் கழகத்தினர் இந் நிகழ்விற்கு வீடமைப்பு அமைச்சரான கௌரவமிக்க சஜித் பிரேமதாஸ அவர்களை வரவழைத்ததுடன் இப் படைவீரர் அவர்கள் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டின் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டவிடத்து தமது கண்பார்வையை இழந்துள்ளார்.
மேலும் இப் படை வீரர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயங்கரவாதிகளால் வீசப்பட்ட மோட்டார் குண்டுத்தாக்குதலில் தமது கண்பார்வையை முற்றாக இழந்துள்ளார்.
மேலும் கௌரவமிக்க அமைச்சரான பிரேமதாஸ அவர்கள் அங்குலானையில் படையினருக்காக புதிய வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
Sports Shoes | NIKE AIR HUARACHE