02nd April 2018 18:50:23 Hours
மலேசியாவின் கோலாலம்பூர் பிரதேச கின்னார விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31ஆம் திகதி இடம் பெற்ற 20 / 20 கிரிக்கெற் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் என்ஸெசிஏ கேஎல் சல்மி விளையாட்டுக் கழகத்துடன் மோதுண்டு வெற்றியடைந்தனர்.
ஆந்த வகையில் இலங்கை இராணுவ கிரிக்கெட்; போட்டியாளர்கள் 20 ஓவர்களில் 5 விக்கட்டுகள் வீதம் 220 புள்ளிகளைப் பெற்று 125 ஓட்டங்களில் சல்மி விளையாட்டுக் கழகத்துடன் மோதுண்டு வெற்றியடைந்ததுடன் இவ் விளையாட்டுக் கழகமானது 95 ஓட்டங்களைப் பெற்று தோற்றுள்ளது.
இப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் இராணுவ கிரிக்கெட் போட்டியாளர்கள் யூகேஎம் விளையாட்டுக் கழகத்துடன் போட்டியிட்டு வெற்றியடைந்ததுடன் இதற்கான இறுதிப் போட்டிகள் அசாதாரண காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை இராணுவ கிரிக்கெட கழகமானது மலேசிய கிறிக்கெற் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று 12 நாள் சுற்றுப் போட்டிக்கான பயணத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை(25) மேற்கொண்டதுடன் இப் போட்டிகள் ஏப்ரல் 05ஆம் திகதி முடிவுறவுள்ளது.
அந்த வகையில் இப் போட்டிகளானது நெகெரி செம்பிலன் கிறிக்கெற் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மார்ச் 27 -30ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
மேலும் இராணுவ ஸ்கொச் போட்டிகளில் லெப்டினன்ட் அஜன்த மென்டிஸ் மற்றும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் - 01 சீகுகே பிரசன்ன அவர்களின் தலைமையிலான குழுவினர் பங்கு பெறவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இராணுவ விiளாயாட்டு வீரர்கள் 3நாள் போட்டிகளில் (50 ஓவர்கள்) மலேசிய சர்வதேச கிரிக்கெற் போட்டிகளில் ஏப்ரல் 1-3வரை கலந்து கொண்டு பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறான போட்டிகளின் மூலம் கிரிக்கெட் போட்டியார்களின் திறமைகளை வெளிக்கொனரும் ஓர் செயற்பாடாக காணப்படுகின்றது.
Asics footwear | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf