02nd April 2018 13:07:09 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள திருநகர் மற்றும் சிவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு மரக் கன்றுகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
முதலாவது சிங்கப் படையணியினால் 800 ஜக் மரக் கன்றுகள் மற்றும் 200 கும்பக் தாவரங்கள் சிவபுரம் ராகுலன் ஆரம்ப பாடசாலையில் இப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பேர்களுக்கு வழங்கினார்கள்.
மேலும் திருநகர் பிரதேச செயலக அலுவலகத்தில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையினரால் 1000 ஜக் மரக் கன்றுகள் மற்றும் 150 மதுகா லாங் ஃபோலியா தாவரங்கள் இப் பிரதேசத்தைச் 100 சிவிலியன்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
affiliate link trace | Air Jordan Sneakers