10th March 2018 11:42:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 , 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 2000 முந்துரிகை கன்றுகள் மாங்கேனி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 475 பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் 25 ஆசிரிய,( ஆசிரியை களுக்கும் (08) ஆம் திகதி வியாழக் கிழமை விநியோகிக்கப்பட்டது.
கடந்த மாதங்களிற்கு முன்பு டெல்மா வியாபார முந்திரிகை கன்று நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 233 ஆவது படைத் தலைமையகத்தினால் 5000 முந்திரிகை கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் அனில் சமரசிங்க அவர்களது தலைமையில் இந்த மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவ அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
Best Authentic Sneakers | Nike