21st January 2018 12:50:50 Hours
2017 ஆம் ஆண்டிற்கான 92 BASL ஆண் பெண் இருபாலாருக்குமான குத்துச் சண்டைப் போட்டிகள் கொழும்பு -07இல் அமைந்துள்ள மாஸ் ரெட் அவெனியூவில் உள்ள ரோயல் கல்லுாரியில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-20ஆம் திகதிகளில் இடம் பெற்ற வேளை இப் போட்டிகளில் கலந்து கொண்ட இராணுவத்தினர் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
நான்கு தினங்களாக நடைப்பெற்ற இந்த போட்டியில் இலங்கை குத்துச் சண்டை கழகத்தினரால் ஏற்பாட்டில் நாடு முழுவதும் பிரபலமான குத்துச் சண்டை கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குத்துச்சண்டை வீரர்கள் 100 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
இப் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் சிறந்த அணியாக தேர்தெடுக்கப்பட்டு வெற்றி கிண்ணத்தை கைப்பற்றினர்.
இப் போட்டியில் ஆண்கள் அணியில் திறமையான வீரரக கோப்ரல் பி.டி.டிமதுரங்க தெரிவுசெய்யப்பட்டார்.மகளிர் அணியில் திறமையான வீராங்கனையாக கோப்ரல் எஸ்.எச்.எஸ் பிரியதர்சினி தேர்ந்தெடுக்கப்பட்டார் இப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச் சண்டை கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
Nike Sneakers Store | Air Jordan