23rd November 2017 13:24:14 Hours
எதிர்வரும் டிசம்பர் மாதம் சாதாரண பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் (19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கிளிவெட்டி மற்றும் கிண்ணியா பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் ஓழங்கு செய்யப்பட்டிருந்தன.
22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது பணிப்புரைக்கமைய பிரதேச கல்வி திணைக்களத்தின் பிரசித்தி பெற்ற விரிவுரையாளர்களது பங்களிப்புடன் கணித பாட கருத்தரங்குகள் இடம்பெற்றன.
இந் நிகழ்விற்கு 224 ஆவது கட்டளை அதிகாரி கேர்ணல் கீர்த்தி கொடாவத்த,உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
bridgemedia | Nike Running