Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2017 18:01:56 Hours

இராணுவத்தினருக்கு நவம்பர் 22 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவ தலைமையகத்தினால் இன்னும் ஒரு கிழமைக்கு இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு காலம் நீடித்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொது மன்னிப்பு காலம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நிறைவு செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் இந்த காலப் பகுதியினுள் 8 கெடெற் அதிகாரிகளும், 10 அதிகாரிகள் உட்பட 8034 இராணுவ வீரர்கள் படையணி தலைமையகங்களில் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள இராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் நாட்டை விட்டு வெளியேற எத்தணிப்பது குற்றவியல் தண்டனையின் 133 ஆவது பிரிவின் படி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் குற்றமாகும்.

மேலும் அனைத்து பிரதேசங்களிலுள்ள மதகுருமார்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் உங்களது பிரதேசத்தில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று உங்களது பிரதேசத்திலுள்ள படையினருக்கு சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலகிச் செல்வதற்கு நவம்பர் 22 ஆம் திகதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவுறுத்தல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

எனவே 22 ஆம் திகதிக்கு முன்பாக இந்த இராணுவ பொது மன்னிப்பு காலத்தினுள் படையணி தலைமையகங்களுக்கு சென்று சட்டபூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது மேற்பார்வையில் இந்த பணிகள் இராணுவ அனைத்து படையணி தலைமையகங்களில் இடம்பெறுகின்றது.

Best jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ