Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2017 10:40:04 Hours

இராணுவ தளபதியை பழைய ஆனந்த கல்லுாரி மாணவர்கள் சந்திப்பு

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பாடசாலை வகுப்பு தோழர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை (23) ஆம் திகதி காலை ஆனந்த கல்லுாரியில் சந்தித்தார்.

இராணுவ தளபதியின் வருகையையிட்டு ஆனந்த கல்லுாரி சாரணர் மற்றும் கெடெற் மாணவ சிப்பாய் அணியினால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஆனந்த கல்லுாரியைச் சேர்ந்த இராணுவ தளபதி 22 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டது ஆனந்த கல்லுாரிக்கு பெருமையை ஊட்டும் விடயமாக அமைவதாக ஆனந்த கல்லுாரி பழைய மாணவர் சங்கம் தெரிவித்தது.

1975 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரை காலப் பகுதியிலிருந்த அதிபரான திரு. எஸ்.எம். கீர்த்திரத்ன அவர்கள் இராணுவ தளபதியை மற்றும் பழைய பாடசாலை மாணவர்கள் வரவேற்றனர். பின்பு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் போது தான் ஆனந்த கல்லுாரியில் நான் படிக்கும் போது வாழ்க்கையில் வீரியமும், சாராம்சமும் என் இராணுவ பணியின் உச்சநிலையை அடைவதற்காக இராணுவத்தின் தளபதியாக ஆவதற்கு என்னை ஊக்குவித்த எனது ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நான் கடமை பட்டிருக்கின்றேன். எனது கல்லுாரி நாட்டிற்காக பரிசாக வழங்கப்பட்ட அனைத்து இராணுவ அலுவலகர்களும். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய வேண்டிய விடயம் கல்லுாரி எங்கள் கல்விப்பணிக்கு கூடுதலாக, சாராத பணிக்காக எங்களுக்கு பயிற்சி அளித்தது. எங்கள் பாத்திரத்தை எப்பொழுதும் வடிவமைத்திருந்தது. மேலும் கல்லுாரி கெடெற்டின் மூலம் நாங்கள் நன்கு ஒழுக்கமான , முன்மாதிரியாக, தைரியமாக இருக்க கற்றுக்கொண்டோம். இதுவே நாம் ஒரு இராணுவ அதிகாரியாக ஆவதற்கு எமக்கு ஊக்கத்தை அளித்தது.

மேலும் "என் பள்ளிப் பருவத்தில், எங்கள் வாழ்நாள் காலத்தில் நாம் மறக்க முடியாத மதிக்கத்தக்க ஆசிரியையான ஜி.டபிள்யு ராஜபக்ஷ, எமது காலத்தின் மிகவும் மதிக்கத்தக்க ஆசிரியையாகும்.

என் எதிர்காலத்தை முன்னறிவித்தவர், என் பெற்றோரைக் கேட்டுக் கொண்டபின் இராணுவப் பயிற்சியை தொடர என்னைத் தூண்டினார். இன்றும் கூட, இந்த பெரிய குரு என் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு துல்லியமான முறையில் எவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார். என்பதை நான் உண்மையில் கண்டுபிடிக்க முடியவில்லை. வரலாற்றின் இந்த தருணத்தில் என் பெரிய ஆசிரியர்களின் நினைவுகளை நான் நினைவு கூருகிறேன். என் பின்னால் நிற்கும் அனைவருக்கும் என் தாழ்மையான அஞ்சலி செலுத்துகிறேன். கொடுக்கப்பட்ட இலக்குகளை நீங்கள் அடைந்த வெற்றிக்கு அப்பால் சென்று சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மிகச் சரியானதை செய்ய வேண்டும். நான் உங்களை பாராட்டியதற்காக இங்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அன்பான கல்லூரி இந்த நாட்டிற்கு வருங்காலத்தில் மேலும் நல்லொழுக்கமுள்ள மற்றும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தலைவர்களைத் தொடரும் என நம்புகிறேன். நீங்கள் அனைவருக்கும் மற்றும் அமைப்பாளர்களுக்கும் நன்றி சொல்கிறேன் "என்று தளபதி முடித்தார்.

விழா முடிவின் போது இராணுவ தளபதிக்கு பாடசாலை சங்கத்தினால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இராணுவ தளபதி சந்தித்து உரையாடினார்.

Sneakers Store | Gifts for Runners