Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2017 13:27:29 Hours

‘நாம் ஆரம்பிப்போம் - டெங்குவை ஒழிப்போம்’ தேசிய நிகழ்ச்சி திட்டம் இராணுவத்தினரது பங்களிப்புடன்

கொழும்பு,கம்பஹாகளுத்தறை, குருணாகல், கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் 1190 இராணுவ படையினரகள் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளை வெள்ளிக் கிழமை (21)ஆம் திகதி ஆரம்பித்தனர்.

அரச பணிப்புரைகளுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை காரியாலய தொடர்பாடலுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் பல்வேறுபட்ட பாதுகாப்பு படைப் பிரிவின் பங்களிப்புடன் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம் அனைத்து ஊடகங்கள்,பாடசாலை மாணவர்கள்,சுகாதார அதிகாரிகள்அரச ஊழியர்கள்,பொது மக்கள்,முப்படையினர்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படையினர்களின் ஒத்துழைப்புடன் (21)ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புகையிரத நிலையங்கள்,வைத்தியசாலைகள்,பஸ்தரிப்பிடம்,பாடசாலை வளாகங்கள்,வியாபார நிலையங்கள்,விகாரைகள் மற்றும் பொது நிலையங்கள் சுத்திகரிக்கப்பட்டன அத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

best Running shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092