Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2025 20:11:10 Hours

மத்திய பாதுகாப்புப் படையினரால் 'இப்தார்' நிகழ்வு ஏற்பாடு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்புப் படையினர் 2025 மார்ச் 25 அன்று கோல்ப் கழக வளாகத்தில் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

தியத்தலாவை மற்றும் ஹப்புத்தலை ஜும்மா பள்ளிவாசலைச் சேர்ந்த மௌலவி மாஹீர் அவர்களுடன் ஏனைய அனைத்து மதத்தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், மாஹீர் மௌலவி இப்தார் மற்றும் நோன்பின் மதிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். சிற்றுண்டி விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்த்து.