04th March 2025 14:10:13 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் கீழ், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 10 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 2025 பிப்ரவரி 28 ஆம் திகதி சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு பூசுதல் திட்டத்தை மேற்கொண்டனர்.