03rd March 2025 15:45:01 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இலங்கை வங்கியுடன் இணைந்து, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினருக்கு வழங்கப்படும் நலன்புரி வசதிகளுக்காக QR கட்டணம் செலுத்தல் முறையை 2025 பெப்ரவரி 28 அன்று படையணி தலைமையகத்தில் அறிமுகப்படுத்தியது.
இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளரும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ என்பீஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.