26th February 2025 16:32:49 Hours
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி ஆகியோரின் வழிகாட்டலில் 522 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 பெப்ரவரி 23 அன்று பளை மருத்துவமனையில் இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
23 வது கெமுனு ஹேவா படையணி சேர்ந்த மொத்தம் 30 வீரர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து, வைத்தியசாலையின் இரத்த வங்கியை நிரப்புவதற்கு பங்களித்தனர்.