21st February 2025 10:35:37 Hours
‘தூய இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அம்பாறையில் உள்ள போர் பயிற்சிப் பாடசாலை, ஏசியன் எலையன்ஸ் நிதி நிறுவனத்துடன் உடன் இணைந்து 2025 பெப்ரவரி 16 அன்று மரம் நடும் திட்டத்தை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது, கருங்காலி, மருதம், மாங்கன்று, முள் சீத்தா மற்றும் மாதுளை கன்றுகள் நடப்பட்டன. இந்த திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏசியன் எலையன்ஸ் நிதி நிறுவன உறுப்பினர்கள் பங்கேற்றனர்.