16th February 2025 21:50:11 Hours
23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில், 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு, 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் காரியவாசம் அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், வெளிச்செல்லும் தளபதி குழுப்படம் எடுத்தல், படையினருக்கு உரையாற்றுதல் மற்றும் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
புதன்கிழமை (2025 பெப்ரவரி 12) பிரியாவிடை நிகழ்வுகள் தொடர்ந்தன. 23 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பாதையோரம் வரிசையில் நின்று, மேஜர் ஜெனரல் காரியவசம் அவர்கள் புறப்படும்போது அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.