16th February 2025 10:24:14 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 18 வது தளபதியாக மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி பதவியேற்றார். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதிக்கு 6 வது கஜபா படையணி படையினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ மரியாதைகளுக்குப் பின்னர், சிரேஷ்ட அதிகாரி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை ஏற்றுக்கொண்டார். மேலும் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக மரக்கன்று நட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திற்கு அவர் அழைக்கப்பட்டார்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, அவர் படையினருக்கு உரையாற்றிய அவர், பயிற்சி, ஒழுக்கம் மற்றும் வெற்றியை அடைவதில் ஒருங்கிணைந்த பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தனது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டதுடன், தனது இலக்குகளை கோடிட்டுக் காட்டினார். மேலும் படையினருக்கு நோக்கங்களை நோக்கிச் செயல்பட ஊக்குவித்தார்.
பின்னர், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கலந்துரையாடல் மண்டபத்தில் பணிநிலை அதிகாரிகளினால் விளக்கவுரை நடத்தப்பட்டது.
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வழங்கல் தளபதி, 14 மற்றும் 61 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள், பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, பிரிகேட் தளபதிகள், நிலைய தளபதிகள், கட்டளை அதிகாரிகள், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.