15th February 2025 12:49:43 Hours
மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 39 வது தளபதியாக 2025 பெப்ரவரி 10ம் திகதி உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு, நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு மைதானத்தில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர் வீரர்கள் நினைவு தூபியில் மலர் வைத்து இலங்கை இராணுவத்தின் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன், படையினருக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.