15th February 2025 08:43:58 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் இலங்கை சிங்கப் படையணியின் 19 வது படைத் தளபதியாக 2025 பெப்ரவரி 11 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கை சிங்கப் படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் சி.என். கத்ரியாராச்சி ஆர்டபிள்யூபீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி தனது புதிய அலுவலகத்தில் படையணி படைத்தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், அணிவகுப்பு சதுக்கத்தில் இலங்கை சிங்கப் படையணி படையினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, படையணியின் புதிய படைத் தளபதி நிகழ்வின் அடையாளமா மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த இலங்கை சிங்கப் படையணியின் அனைத்து வீரமிக்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நினைவாக போர் வீரர் நினைவுச்சின்னத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், படையினருக்கு உரையாற்றிய அவர், தனது எண்ணங்களையும் முன்னோக்குகளையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
பின்னர், படையணியின் புதிய படைத் தளபதி அனைத்து அதிகாரிகளுடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், இலங்கை சிங்கப் படையணி அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற சம்பிரதாய மதிய உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.