14th February 2025 18:25:21 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பிரதி பதவிநிலை பிரதானியாக பொறுப்பேற்கவுள்ள நிலையில், 2025 பெப்ரவரி 13 அன்று மேற்கு பாதுகாப்புப் படை படையினரால், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த படைத் தளபதியை, சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றதுடன், 1 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், வெளிச்செல்லும் தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். பின்னர், தனது அலுவலகத்தை ஒப்படைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். மேலும் பார்வையாளர்கள் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டு குறிப்புக்களை பதிவிட்டதுடன், மேற்கு பாதுகாப்புப் படையினருக்கு உரையாற்றினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.