14th February 2025 18:26:01 Hours
மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்கள் 2025 பெப்ரவரி 14ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சமய நிகழ்வுகளுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் நாயகம் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் மதகுருமார்களின் பிரார்த்தனைகளுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.