14th February 2025 13:31:22 Hours
மத்திய பாதுகாப்புப் படையின் 22 வது தளபதியான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது தனது கடமைகளை விட்டு, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாகப் பொறுப்பேற்றர்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 7 வது இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், வெளிச்செல்லும் தளபதி, தனது பதவியை ஒப்படைக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், படையினருக்கு உரையாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிழ்வில் பங்கேற்றனர்.