12th February 2025 13:58:17 Hours
மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள், 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
புதிய தளபதியை பணிநிலை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றதுடன், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தனது அலுவலகத்தில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தளபதி கையெழுத்திட்டார். பின்னர் அவர் ஒரு குழுப்படம் எடுத்துக் கொண்டார். படையினருக்கான தனது உரையில், படைப்பிரிவின் எதிர்காலம் குறித்த தனது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.