06th February 2025 15:06:52 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 05 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகதிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
படையணிக்கு வருகை தந்த அவர், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போர்வீரர்கள் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிலைய தளபதி பிரிகேடியர் என்எச்ஜே மங்கள அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மரக்கன்றும் நாட்டினார்.
படையினருக்கு உரையாற்றிய அவர், தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அனைத்து நிலையினருடன் உரையாடினார். தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இந்த நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.