20th January 2025 15:02:28 Hours
இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 20 ஆம் திகதி மத்தேகொட சப்பர்ஸ் இல்லத்தில் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
தனது உரையில், இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வையுடனும் அரசாங்கத்தின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடனும் இணைந்த ஒரு கருத்தான 'தூய இலங்கை' திட்டம் தொடர்பாக எடுத்துரைத்தார். புதுமைகளைத் தழுவி, ஒத்துழைப்பை வளர்த்து, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முன்னேற்றத்திற்கு பங்களிக்க தங்கள் படையினரை ஊக்குவிக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இராணுவத்தின் முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும், வீரர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும் படையணியின் படைத் தளபதி வலியுறுத்தினார்.
அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும், நாட்டின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அர்ப்பணிப்பு, அறிவு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர்களுக்கு நினைவூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.