20th January 2025 13:21:06 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் (பதில்) தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 14 ம் திகதி 3 வது (தொ) இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரின் வாகன தொடரனிக்கு படையினரால் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எப்ஜே சமரநாயக்க ஆர்எஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, படையணியின் செயற்பாடுகள் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தை சிரேஷ்ட அதிகாரிக்கு கட்டளை அதிகாரி விளக்கினார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி முகாமை பார்வையிட்டு முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்தார்.
படையினருக்கு ஆற்றிய உரையில், "தூய இலங்கை" திட்டத்தினை ஆதரிப்பதற்கான இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். படையணியின் இலக்குகளை அடைவதற்கு வீரர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மீள்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
விஜயத்தை நினைவுகூரும் வகையில், அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துகளை பதிவிட்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.