Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2025 10:44:10 Hours

54 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமைபொறுப்பேற்பு

54 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக பிரிகேடியர் ஏஎம்சிபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் 2025 ஜனவரி 17 ஆம் திகதி கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு இராணுவ மரபுகளுக்கமைய விஜயபாகு காலாட் படையணியின் 4 வது படையலகு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வின் முதல் பகுதியாக, பதவியேற்ற தளபதி, படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினார்.

புதிய தளபதி தனது புதிய அலுவலகத்திற்கு வந்து, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், (பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து) படைப்பிரிவு தளபதியாக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர், படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். அன்றைய நாளின் நினைவாக தளபதி 54 வது காலாட் படைப்பிரிவு அலுவலக வளாகத்தின் முன் மாங்கன்றிணை நாட்டினார்.

தனது பணி மற்றும் கடமைகளை வகுத்து, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடம் முறையாக உரையாற்றிய அவர், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, உயர் ஒழுக்கத் தரத்தைப் பேணுவதோடு அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறும் அவர்களை வலியுறுத்தினார்.

பின்னர் அவர் 54 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட விரிவான விளக்கத்தில் பங்கேற்றார். இறுதியாக அவர் அதிகாரிகள் உணவகத்தில் மதிய உணவில் அதிகாரிகளுடன் இணைந்தார்.

541,542 மற்றும் 543 வது காலாட் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.