18th January 2025 18:25:08 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் டி.எஸ்.எஸ். ரதலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 17 அன்று இராணுவத் தலைமையகத்தில் காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் 26 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.
தனது கடமை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.